- ஆசிரியர்பொதுமாறுதல்நிபந்தனைகள்
- இயக்குநர் செயல்முறைகள்(29.08.2011)
- அனைவருக்கும் கல்வி இயக்கம் (29.08.11)
- பள்ளிக்கல்விக்கான முதல்வரின் சட்டமன்ற அறிவிப்புகள் - 26.08.2011
- தன்பங்கேற்புஓய்வூதியத்தைகைவிட 22.09.2011 சென்னைபேரணி
- தமிழ் முதன்மைப்பாடம்- இயக்குநர் செயல்முறைகள்
- செயல்வழிக்கற்றல் மாதிரிபடிவம்
- கல்விமானியக் கோரிக்கை(2011-12)
- சமச்சீர்க்கல்வி காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம்
- LIFE ADDRESS
Sunday, 11 September 2011
Monday, 5 September 2011
Departmental Exam Online Application Form
Web Application designed, developed and hosted by National Informatics Centre, Chennai Best viewed with 800X600 monitor resolution and with Medium Text size |
| Departmental Examinations - December 2011 - Instructions
The Controller of Examinations Tamil Nadu Public Service Commission 1, Greams Road Chennai - 600 006 |
| Application Form |
| Apply Online |
| Print Application / Identification Certificate |
| Help |
| Tests and Fees |
| Examination Centres |
| Notification in Tamil (PDF) |
| Notification in English (PDF) |
| Annexure (PDF) |
| Time Table (PDF) |
| List of Head Post Offices (PDF) |
| |
| Feedback |
| Send your feedback |
| Links |
| |
| |
| |
| |
Teacher's Day wishes
தனது வாழ்வையே ஆதாரமாக்கும் ஆசிரியர்
Labels: ஆவணம்
நமக்குள் இருக்கும் திறமையை, வேட்கையைக் கண்டறிந்து அத்துறையில் பிரகாசிக்க காரணமானவர்களில் குறிப்பிட்ட பங்கு ஆசிரியர்களுக்கே உள்ளது. மிகச்சிறந்த வழிகாட்டி, ஆலோசகர், தத்துவவாதி, நண்பன் என எல்லாமுமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.
பள்ளியிலும், கல்லூரியிலும் அவர்களின் அருமை நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், நிதர்சன உலகை எதிர்கொள்ளும் போது, அவர்களின் வார்த்தைகள் தான் நம்மை வழிநடத்துகின்றன.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் என்பது அறிந்ததே... அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், ‘எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்‘ என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியின் மதிப்பு
ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல; இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் கருத்தாக இருக்க முடியும்.
ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.
எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரிவடையச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியர்கள் கணிசமான அளவில் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
தற்போதைய மாணவர்கள் மட்டுமின்றி, மாணவப் பருவத்தை கடந்தவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு நன்றி சொல்வோம்...
Saturday, 3 September 2011
Subscribe to:
Posts (Atom)




